வீரர்களுக்கு முழு சுதந்திரம்.. விதிமுறையில் மாற்றம்.. கமாண்டர்களுக்கு "ஃப்ரி ஹேண்ட்" கொடுத்த இந்தியா
லடாக்: இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு இந்திய ராணுவம் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
லடாக் எல்லை பிரச்சனை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. மிக முக்கியமாக பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டை முடிய வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். லடாக்கில் நடந்த 20க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

முழு சுதந்திரம்
இதையடுத்து இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு இந்திய ராணுவம் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல்கள் வருகிறது. அதன்படி இந்திய ராணுவம் முக்கியமான சில உத்தரவுகளை எல்லையில் இருக்கும் படைகளுக்கு அளித்துள்ளது. எல்லையில் சீனா அத்துமீறினால் காமாண்டோ வீரர்கள் துணிச்சலாக சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம்.

என்ன சூழ்நிலை
எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் முடிவுகளை எடுக்கலாம். மேலிடத்தின் உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். உங்கள் மேலதிரிகரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். தேவையான நேரத்தில் தேவையான முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. எல்லையில் சீனா அத்துமீறினால் உடனடியாக அதற்கு இந்திய வீரர்கள் திருப்பி பதிலடி கொடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த இடம்
கல்வான் பகுதியில் கடந்த வாரம் நடந்த சண்டையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்திய வீரர்கள் சென்றனர். ஆனால் சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இந்திய வீரர்களை தாக்கியது. திட்டம் போட்டு மிக மோசமான அந்த தாக்குதலை இந்திய வீரர்கள் மீது சீனா நிகழ்த்தியது. இதனால்தான் இந்திய வீரர்கள் அங்கு 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

திருப்பி தாக்குங்கள்
இந்தியாவிற்கு திருப்பி தாக்குவது தொடர்பாக உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் இந்திய வீரர்கள் தற்காப்பிற்காக மட்டுமே பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில்தான் தற்போது இந்திய வீரர்களுக்கு எல்லையில் எதுவும் செய்ய வசதியாக "ஃப்ரி ஹேண்ட்" கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் தாக்குதலுக்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் என்கிறார்கள் .
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications