அத்தனை முக்கிய வழக்குகளையுமே இனி தலைமை நீதிபதிதான் விசாரிப்பாராம்!
டெல்லி: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே விசாரிக்க இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையில் 4 நீதிபதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டின. இது நாட்டின் நீதித்துறை வரலாற்றில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க வகை செய்யும் இம்பீச்மென்ட் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இடதுசாரிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் இடதுசாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

அதிகாரப்பூர்வமாக வெளியீடு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் http://supremecourtofindia.nic.in/judges-roster-0 எந்தெந்த வழக்குகள் எந்தெந்த நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வரும் 5-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பகிரங்கமாக அறிவிப்பது என்பது இதுதான் முதல் முறை.

அனைத்து முக்கிய வழக்குகள்
மொத்தம் 13 பக்கங்களில் இந்த வழக்கு ஒதுக்கீடு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இனி அனைத்து பொதுநலன் வழக்குகள், தேர்தல் வழக்குகள், கிரிமினல் வழக்குகள், சமூக நீதி வழக்குகள் மற்றும் அரசியல் சாசன நியமனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்.

நீதிபதி கோகோய்க்கு...
நீதிபதி செல்லமேஸ்வர், தொழிலாளர்கள், மறைமுக வரிகள், கிரிமினல் வழக்குகள், நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகளை விசாரிப்பார். அடுத்த தலைமை நீதிபதியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ரஞ்சன் கோகோய், தொழிலாளர் நலன், மறைமுக வரிகள், கிரிமினல், தனிநபர் சட்டம் மற்றும் மதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்.

யார் யாருக்கு ஒதுக்கீடு?
நீதிபதி மதன் லோகுருக்கு சூழலியல், நுகர்வோர் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் கனிம வளங்கள், தனிநபர் சட்டம், ராணுவம் மற்றும் துணை ராணுவம் தொடர்பான வழக்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். நீதிபதி குரியன் ஜோசப்புக்கு தொழிலாளர் நலன், கிரைம் மற்றும் குடும்ப நல விவகாரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications