”அடிக்குது குளிரு...” – கொட்டும் பனியால் போர்வைக்குள் முடங்கிய டெல்லிவாலாக்கள்!
டெல்லி: டெல்லியில் இன்று காலை முதலே நிலவிய கடும் பனிமூட்டத்தால் டெல்லி வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக ஏறக்குறைய 16 விமானங்கள் மற்றும் 50 ரயில்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், இரு விமானங்களின் பயணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதே போல் 12 ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமே 15தான்:
ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் அங்கு பதிவானது.

வானிலை ஆய்வு மையம் கணிப்பு:
இன்று அதிகபட்சமாக 16 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும், குறைந்த பட்சமாக 5 டிகிரி வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிருக்கு நான்கு பேர் பலி:
நாட்டின் வடக்கு பிரதேசத்தில் நிலவும் கடும் குளிரால் ஞாயிறன்று உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும், தலைநகர் டெல்லியில் மூச்சுத்திணறி மூவரும் பலியானார்கள்.

வந்துருச்சு சில்லாய் கலன்:
ஜம்மு காஷ்மீரில் "சில்லாய்கலன்" எனும் 40 நாள் மிகக்கடுமையான பனிக்காலம் நேற்று துவங்கியது. இதன் மூலம் அங்கு முதல் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ஸ்ரீநகரில் பரவாயில்லை:
அதே சமயம் ஸ்ரீ நகரில் நேற்று முன்தினம் -4.4 டிகிரியாக இருந்த குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று சற்று குறைந்து -1.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications