மேற்கு வங்கத்தில் அமைச்சரை வரவேற்காத மாணவர் அடித்துக்கொலை- எதிர்கட்சியினர் பந்த்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் அமைச்சரை வரவேற்காத மாணவரை ஆளும் கட்சியினர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சபாங்கில் உள்ள கல்லூரியில் அமைச்சர் சவுமன் மகாபத்ராவை வரவேற்பது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சரை அனைத்து மாணவர்களும் வரவேற்க வேண்டும் என ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் மாணவர் அணியை சேர்ந்த மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரும்பு கம்பிகள், உருட்டு கட்டைகளுடன் திரிணாமூல் காங்கிரசார் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர் கொலையை கண்டித்து மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில் மாணவர் கொலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மாணவர் அணியினர் தான் கல்லூரியில் போராட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications