Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர்ட்பிளேர் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் -திமுக கூட்டணி மெஜாரிட்டி- தலைவராக அமரப்போவது யார்?

போர்ட் பிளேர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சியை கைப்பற்றுவதில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

போர்ட்பிளேர்: போர்ட் பிளேர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சித் தலைவராக அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தலைவரை தேர்வு செய்வதில் தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர்களின் முக்கிய பங்கு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அங்கு கிராமப்புறங்களில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களிலும், போர்ட் பிளேர் நகராட்சியில் நடந்த தேர்தலிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஜே.என்.ஆர்.எம். கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

Congress, DMK TDP Alliance majority Port Blair Municipal Council Elections

போர்ட்பிளேர் நகராட்சித் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 110 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் போர்ட் பிளேர் நகராட்சியில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 10 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களையும், திமுக ஒரு இடத்தையும், மீதமுள்ள ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். பத்தாவது வார்டில் திமுக வேட்பாளர் மங்கையர்கரசி வெற்றி பெற்றுள்ளார்.

போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சிலில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் பாஜகவுக்கு 10 இடங்களும், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு 11 இடங்களும் கிடைத்தன. ஆனால், பாஜகவோ, காங்கிரஸோ, பிபிஎம்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல் நகராட்சியில் தலைவர் பதவியை பிடிக்க முடியாது என்பதால், கவுன்சிலை அமைக்கும் முக்கியமான சாவி இப்போது தெலுங்குதேசம் கட்சியிடம் உள்ளது.

பிபிஎம்சியின் தலைவர் பதவிக்கான இடம் ஒரு பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் அந்தமானில் வெற்றி பெற்ற இரண்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களில் வார்டு எண் 5ஐ சேர்ந்த திருமதி செல்வி ஒரு பெண். வார்டு எண் 23 இலிருந்து சமன்பாட்டில் ஒரு சுயேட்சை வேட்பாளரும் உள்ளார் ஆனால் அதிகபட்சமாக அவர் முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும் அல்லது தெலுங்கு தேசம் கட்சி பாஜகவை ஆதரித்து சுயேட்சை வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தால் சமன் செய்ய முடியும்.

போர்ட்பிளேரில் முதன்முறையாக நகராட்சி தலைவரை தேர்வு செய்யும் பணியில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. நாங்கள் யார் பக்கம் இணைந்தாலும் தலைவர் பதவியை கோருவோம் என அக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் போர்ட்பிளேர் நகராட்சியில் தலைவராக அமரப்போகும் பெண் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டில் அந்தமான்-போர்ட்பிளேர் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக-பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் போர்ட் பிளேயர் நகரசபையை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து அந்தமான் நகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது திமுக வைச் சேர்ந்த பெண் மார்சிலாடுங் நகர்மன்றத் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+