உ.பி இடைத்தேர்தலில் தில்லுமுல்லு.. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி
உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பாஜக முன்னிலை வகித்தது.
ஆனால் இப்போது இரண்டு தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்து இருக்கிறது.
13 சுற்றுகள்முடிவடைந்த பின்பும் 4 சுற்றுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.