எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்காவிட்டால் காங்கிரஸ் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்: கமல்நாத்
டெல்லி: எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு தராவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபாவில் காங்கிரஸுக்கு 44 சீட்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான கமல்நாத் கூறுகையில்,

லோக்சபாவில் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற அவையின் மொத்த உறுப்பினர்களின் 10 சதவீதம் பேரை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி இல்லை. சபாநாயகர் பாஜகவை சேர்ந்தவர் என்று எங்களுக்கு தெரியும். அவர் ஒரு அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முடிவு பாஜக மற்றும் மோடியின் கருத்துபடி இருக்கலாம். அதற்காக நான் சபாநாயகர் சிலரின் பேச்சை கேட்டு நடக்கிறார் என்று கூறவில்லை.
காங்கிரஸுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வது தான் சரியானது என்றார்.
ஆனால் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
சபாநாயகரின் முடிவை மதிக்க வேண்டும். நேருஜி காலத்திலும், இந்திரா காந்தியின் காலத்திலும் எதிர்கட்சி தலைவர் இல்லை. ஏன் ராஜீவ் காந்தியின் காலத்திலும் கூட எதிர்கட்சி தலைவர் இல்லை என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications