ஆளுநர் ரோசைய்யாவின் உறவினரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த 2 ஆப்பிரிக்கர்கள்
பெங்களூர்: தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் உறவினர் ராஜன் குமாரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த ஆப்பிரிக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் உறவினர் ராஜன் குமார் என்கிற ராஜு(62). நகைக்கடைகள் வைத்துள்ளார். அவருக்கு பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வீடுகள் உள்ளன. ராஜன் குமார் சுத்தம் செய்யப்படாத தங்கம் வாங்க விரும்புவதாக ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்டார்.

அந்த விளம்பரத்தை பார்த்த பெங்களூரில் வசிக்கும் கானாவை சேர்ந்த மரியோ கோமெஸ் அப்பாயா(35) மற்றும் நமிபியாவை சேர்ந்த ஃபோஃபோ ஜார்ஜ் மார்ஜ்(35) ராஜுவை ஏமாற்ற திட்டம் தீட்டினர்.
தங்கம் தொடர்பாக அவர்கள் ராஜுவை சந்தித்து பேசினர். காலப்போக்கில் அவர்கள் ராஜுவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டனர். அந்த இருவரும் ராஜுவை அப்பா என்று அழைக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கமாகிவிட்டனர். ராஜுவிடம் சந்தையில் இருப்பதை விட குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஒரு நாள் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை ராஜுவிடம் அளித்து இதை உங்கள் வீட்டில் வைத்திருங்கள், ஹோட்டல் அறையில் வைக்க பயமாக உள்ளது என்று கூறினர். இதையடுத்து அவர்கள் ராஜுவின் நம்பிக்கையை பெற்றுவிட்டனர்.
அதன் பிறகு ராஜு அவர்களிடம் தங்கம் வாங்க வைத்துள்ள ரூ. 55 லட்சம் அடங்கிய பாக்கெட்டை காண்பித்தார். அவர்கள் ராஜுவுக்கு தெரியாமல் அந்த பணத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கள்ளநோட்டை வைத்துவிட்டனர். அவர்கள் முன்னதாக ராஜுவிடம் கொடுத்து வைத்த ரூ.3. 3 லட்சமும் கள்ளநோட்டுகள் தான்.
கள்ளநோட்டுகள் பற்றி அறிந்த ராஜு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவரை அந்த இருவருடனும் வழக்கம் போன்று பழகி பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைக்குமாறு கூற அவரும் அப்படியே செய்தார்.
ஹோட்டலுக்கு வந்த அந்த இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஹவாலா மூலம் அவர்களின் நாட்டிற்கு அனுப்ப கொடுத்து வைத்திருந்த ரூ.36 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜுவின் பணத்தில் ரூ.5 லட்சத்தை அவர்கள் செலவு செய்துவிட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இருவரையும் கைது செய்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications