மேற்குவங்க தேர்தல் தோல்விக்கு இதான் காரணம்! கொரோனா மீது பழிபோட்ட பாஜக ஜேபி நட்டா! பரபர பேச்சு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்விக்கு கொரோனா பரவல் தான் காரணம் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 8 கட்டங்களாக மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளில் 213 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

பாஜக 77 இடங்களில் வெற்றி
இதன்மூலம் மம்தா பானர்ஜி 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறவில்லை.

நீடிக்கும் வார்த்தைப்போர்
இந்நிலையில் தொடர்ந்து பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

கொரோனா தான் காரணம்
அப்போது கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஏஏன் தோற்றது என்பது பற்றி அவர் விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. 4ம் கட்ட தேர்தலின்போது கொரோனா 2ம் அலை பாதிக்க தொடங்கியது. இதனால் பாஜகவால் பிரசாரங்களை முன்னெடுக்க முடியவில்லை. கொரோனா பரவாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ஆதரவான அலை இருந்தது. ஆனால் 4ம் கட்ட தேர்தலுக்கு பிறகு பிரசாரம் மேற்கொள்ளாமல் சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது. இது தேர்தல் முடிவை மாற்றிவிட்டது.

அடுத்த முறை வெற்றி
எனவே அடுத்த முறை மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி கொல்கத்தாவில் வெற்றி பேரணியை நடத்துவோம். மேலும் மேற்கு வங்கத்தின் பெருமையை சீர்குலைப்பவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்குவதை பாஜக செய்யும். ஜனநாயக ரீதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக நிச்சயம் வெல்லும். எனக்கு வரவேற்பு அளிக்க கூடிய கூட்டம் இதனை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது'' என்றார்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்
முன்னதாக அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கு எதிராக பிரச்சனை அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications