அஜய் மக்கான் பெயரில் போலி கடிதம் தயாரித்த வழக்கு- ஜெகதீஷ் டைட்லருக்கு கோர்ட் ஜாமீன்!

ஆயுத தரகர் அபிஷேக் வர்மாவுக்கும் அவரது கூட்டாளி எட்மண்ட் எல்லனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அப்போது அபிஷேக் தொடர்பான பல ஆவணங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், சிபிஐ-க்கும் எட்மண்ட் அனுப்பிவைத்தார்.
அதில், அஜய் மக்கானின் பெயரிலான கடிதமும் ஒன்று. அதாவது 2009-ம் ஆண்டு சீனத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு விசா விதிமுறைகளிலிருந்து சலுகை பெற்றுத் தருவதற்காக அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் பெயரில், பிரதமருக்கு கடிதம் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் தாம் அப்படி ஒரு கடிதமே கொடுக்கவில்லை என்று அஜய் மக்கான் மறுத்துவிட்டதுடன் புகாரும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அபிஷேக் வர்மா மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அபிஷேக் வர்மா போலி கடிதம் தயாரிக்க உதவியதாக ஜெகதீஷ் டைட்லர் பெயர் கூறப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஜெகதீஷின் பெயர் இடம் பெறவில்லை.
இதனால் ஜெகதீஷ் டைட்லர் தாக்கல் தமக்கு ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது டைட்லருக்கு ஜாமீன் தர சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
பின்னர் டைட்லருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications