மகாராஷ்டிர மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்ட தடை செல்லாது - உச்சநீதிமன்றம்
டெல்லி: மகாராஷ்டிராவில் மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாடக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபார்களில் நடனம் இடம் பெற்று இருந்தது. மேலும் பெண்களே மதுபார்களில் சப்ளையர்களாக பணி புரிந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபார் நடனத்துக்கு மாநில போலீஸ் சட்டத்தின் கீழ் தடை விதித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை இழந்தனர். மாநில அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இன்று இந்த மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து மகாராஷ்டிர அரசு நடனத்துக்கு தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்பு கூறியது.
அதேசமயம் நடனத்துக்கு அனுமதி வழங்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வகையான நடனங்கள் இடம் பெற வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications