ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவமதிப்பு வழக்கு.. பிவாண்டி கோர்ட்டில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன்
ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜரானார்.
மும்பை: காந்தி கொலை தொடர்பாக அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் பிவாண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆஜரானார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
2014ம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றனர் என்று பேசினார். இதுதொடர்பாக பிவாந்தி நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குந்தே, ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆஜராக கூறிய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிவாண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வந்தார். இன்று காலை 10 மணியளவில் கோர்ட்டில் ஆஜரானார். இதனையடுத்து, அவருக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications