ரூபாய் நோட்டு விவகாரத்தில் புரிந்து கொள்ளாமல் பேசும் ராகுல்- நிர்மலா சீத்தாராமன் சாடல்
டெல்லி: 500,1000 அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாமல் செல்லாது என அறிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி புரிதல் இல்லாமல் பேசி வருவதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

ராகுல் குற்றச்சாட்டு தவறானவை
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் முக்கியத்துவத்தை ராகுல் புரிந்துகொள்ளவில்லை . ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு முன், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை; இதுதொடர்பான தகவல் குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டது என்று பிரதமர் மோடி மீது ராகுல் சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறானவை.

புரியாமல் பேசும் ராகுல்
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாமல், ராகுல் பேசுகிறார். உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டன என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று கடைசி நாளாகும்
இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள இன்று கடைசி நாளாகும். இனிமேல் ரிசர்வ் வங்கிக்கு சென்று அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகளில் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் விமர்சனம்
முன்னதாக, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்து, பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைதான், உலகிலேயே பொருளாதார ரீதியில் முன்னேற்பாடின்றி எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications