சசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.. டிஐஜி ரூபா அதிரடி!
சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் தான் உறுதியாக இருப்பதாக டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவிதுள்ளார்.
பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் தான் உறுதியாக இருப்பதாக டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவிதுள்ளார். தன்மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.
மேலும் பல குற்றவாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். ரூபாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

விசாரணை அதிகாரி நியமனம்
இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

படக்காட்சிகள் வெளியானது..
இந்நிலையில் சத்திய நாராயணராவ் கூறிய புகார்களுக்கு டிஐஜி ரூபா விளக்கம் அளித்துள்ளார். சசிகலா அறையில் டிவி, மின்விசிறி இருந்த படக்காட்சிகள் வெளியானது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

தன்னை குறிவைப்பது நியாயமற்றது
மேலும் தன்மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சசிகலா விவகாரத்தில் தன்னை குறிவைப்பது நியாயமற்றது என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சலுகைகள்
சசிகலா விவகாரத்தில் டிஜிபிக்கு அளித்த அறிக்கை பற்றி தான் ஊடகங்களிடம் பேசவில்லை என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் தான் உறுதியாக இருப்பதாகவும் டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவிதுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications