சபரிமலை பக்தர்களிடம் கனிவாக நடக்க வேண்டும்: போலீசாருக்கு கேரள ஹைகோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்களிடம் அங்கு பணியில் உள்ள போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேரள ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை போலீசார் மிகவும் தரக் குறைவாக நடத்துவதாகவும், அதிக கெடுபிடி காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சபரிமலை வரும் பக்தர்களிடம் போலிசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என கேரள ஹைகோர்ட் வலியுறுத்தியுள்ளது.

பக்தர்கள் கூட்டம்...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவில் இருக்கும். இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் பதினெட்டாம்படி ஏறி சென்று சுவாமி அய்யப்பனை தரிசிப்பார்கள்.

அனுமதியில்லை....
மேலும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை சபரிமலையிலும், மாளிகைபுரத்து அம்மன் கோவிலிலும் சுத்தி பூஜை நடைபெறுகிறது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு பதினெட்டாம்படி ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தெரிவித்துள்ளார்.

வழக்கு....
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப் படும் போலீசார் தங்களின் பணியில் அதிக கெடுபிடி காட்டுவதாகவும், பதினெட்டாம்படி ஏறும் பக்தர்களை பிடித்து தள்ளி விடுவதாகவும் கேரள ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு....
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை வரும் பக்தர்களை போலீசார் கனிவுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், பக்தர்களின் வாகனங்களை சோதனை செய்யும்போது, அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பக்தர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவ முகாம்...
அதிகரித்து வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சார்பில் பம்பையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் மலையேர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

பலத்தப் பாதுகாப்பு...
சிறிய நோய் தாக்குதலுக்கு உள்ளான பக்தர்களுக்கு அந்த மருத்துவ முகாமிலேயே டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications