காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்.. இந்திய ராணுவம் பதிலடி.. பதற்றம்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் இப்போதுதான் தணிந்துள்ளது. பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க போவதாக அறிவித்தது. நேற்று இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே எல்லையில் நீடித்து வந்த பதற்றம் முடிவிற்கு வந்தது.

இந்த நிலையில் இன்று அபிநந்தன் இந்தியா திரும்ப உள்ளார். இந்த நல்ல வேளையில்தான் தற்போது இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
இன்று அதிகாலை தொடங்கிய தாக்குதல் 7.10 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 45 நிமிடம் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
[Read more: அடுத்த திருப்பம்.. தடை செய்யப்பட்டது பழமையான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம்.. மத்திய அரசு அதிரடி!]
இந்திய ராணுவ முகாமை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் கையெறி குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. அதேபோல் துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட்டு இருக்கிறார்கள். இதனால் இந்திய ராணுவம் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இந்திய ராணுவமும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு நீண்ட நேரம் கடுமையான சண்டை நடைபெற்றது. தற்போது இந்த சண்டை முடிவிற்கு வந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications