பாஜகவின் தமிழகத்து தலையாட்டி பொம்மைகள் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு
பாஜக தமிழகத்தில் வைத்துள்ள இரு தலையாட்டி பொம்மைகள் தான் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என்று சி.ஆர்.சரஸ்வதி விமர்சித்து உள்ளார்.
பெங்களூரு : மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக செயல்படவே ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி உள்ளது என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசினார். சில கேள்விக்கு பதிலளித்தார் சிஆர் சரஸ்வதி.

டி.டி.வி தினகரனுக்கு தமிழகத்தில் அமோக ஆதரவு எழுந்து இருக்கிறது என்பதை அறிந்து சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் சிறையில் நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வைத்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் தான் பயந்து வருகிறார்கள்.
இது தோல்வியின் காரணமான பயமா அல்லது பாஜகவின் உத்தரவு வரவில்லையே என்பதற்கான காத்திருப்பா என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.
பாஜக தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரையும் தலையாட்டி பொம்மைகளாக்கி வைத்திருக்கிறது. ஆனால் பாஜக வெற்றி பெற அண்ணன் டி.டி.வி. தினகரன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கிய அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பிரதமர் மோடி படம் போட்டு காலண்டர் அச்சடிக்கும் அவலத்தை எங்கு போய் சொல்வது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தலின் தோல்வி பயம் காரணமாகவே அதில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications