டெல்லியில் தமிழக விவசாயிகள் பாடை கட்டிப் போராட்டம்... பாராமுகமாக மத்திய அரசு!
தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று படை கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் 15ஆவது நாளான இன்று பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போராட்டத்தை நடத்தினர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்காணு தலைமையில் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 16ஆம் தேதியிலிருந்து இரண்டாம்கட்ட போராட்டத்தைத் தொடங்கி, மொட்டையடித்துப் போராட்டம், தரையில் உருண்டு போராட்டம் என ஒவ்வொரு நாளும் நூதனமுறையில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் 15ஆவது நாளாக போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்றும் தொடர்கிறது. அதில், பாடைகட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் துயர் நிறைந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறினார்.
ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வு குறித்து எதுவும் கூறவில்லை. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வது குறித்தும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தமிழக விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications