டெல்லியில் தமிழக விவசாயிகள் பாடை கட்டிப் போராட்டம்... பாராமுகமாக மத்திய அரசு!
தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று படை கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் 15ஆவது நாளான இன்று பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போராட்டத்தை நடத்தினர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்காணு தலைமையில் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 16ஆம் தேதியிலிருந்து இரண்டாம்கட்ட போராட்டத்தைத் தொடங்கி, மொட்டையடித்துப் போராட்டம், தரையில் உருண்டு போராட்டம் என ஒவ்வொரு நாளும் நூதனமுறையில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் 15ஆவது நாளாக போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்றும் தொடர்கிறது. அதில், பாடைகட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் துயர் நிறைந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறினார்.
ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வு குறித்து எதுவும் கூறவில்லை. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வது குறித்தும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தமிழக விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications