பாலியல் வழக்கு... சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு... பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை விவரங்களை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
Recommended Video

சன்டிகர்: பாலியல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனையை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு தங்கியிருந்த பெண் பக்தர்களை குர்மீத் ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

சுனாரியா சிறை
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு, பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலவரம் வெடித்தது
சாமியார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானாவில் அன்றைய தினம் கலவரத்தில் ஈடுபட்டதால் 38 பேர் பலியாகினர். 250 பேர் காயமடைந்தனர்.

ரோட்டக் செல்கிறார் நீதிபதி
சாமியாரின் தண்டனை விவரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக்கில் உள்ள சிறைக்கு செல்கிறார்.

துணை ராணுவத்தினர் குவிப்பு
சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் தண்டனை விவரங்களை வாசிக்கிறார் நீதிபதி. இதனால் சிறை வளாகத்தை சுற்றி 2,300 துணை ராணுவ படையினரும், 9,000 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க ஹரியானா, பஞ்சாபில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பஞ்சாப், ஹரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டக்கில் பேருந்து, ரயில் சேவைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ராம் ரஹீமிற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications