பாலியல் வழக்கு... சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு... பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை விவரங்களை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
Recommended Video

சன்டிகர்: பாலியல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனையை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு தங்கியிருந்த பெண் பக்தர்களை குர்மீத் ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

சுனாரியா சிறை
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு, பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலவரம் வெடித்தது
சாமியார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானாவில் அன்றைய தினம் கலவரத்தில் ஈடுபட்டதால் 38 பேர் பலியாகினர். 250 பேர் காயமடைந்தனர்.

ரோட்டக் செல்கிறார் நீதிபதி
சாமியாரின் தண்டனை விவரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக்கில் உள்ள சிறைக்கு செல்கிறார்.

துணை ராணுவத்தினர் குவிப்பு
சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் தண்டனை விவரங்களை வாசிக்கிறார் நீதிபதி. இதனால் சிறை வளாகத்தை சுற்றி 2,300 துணை ராணுவ படையினரும், 9,000 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க ஹரியானா, பஞ்சாபில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பஞ்சாப், ஹரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டக்கில் பேருந்து, ரயில் சேவைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ராம் ரஹீமிற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications