பாலியல் வழக்கு... சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு... பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனை விவரங்களை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
Recommended Video

சன்டிகர்: பாலியல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இன்று தண்டனையை சிபிஐ நீதிமன்றம் அறிவிக்கிறது.
தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு தங்கியிருந்த பெண் பக்தர்களை குர்மீத் ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

சுனாரியா சிறை
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு, பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலவரம் வெடித்தது
சாமியார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானாவில் அன்றைய தினம் கலவரத்தில் ஈடுபட்டதால் 38 பேர் பலியாகினர். 250 பேர் காயமடைந்தனர்.

ரோட்டக் செல்கிறார் நீதிபதி
சாமியாரின் தண்டனை விவரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக்கில் உள்ள சிறைக்கு செல்கிறார்.

துணை ராணுவத்தினர் குவிப்பு
சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் தண்டனை விவரங்களை வாசிக்கிறார் நீதிபதி. இதனால் சிறை வளாகத்தை சுற்றி 2,300 துணை ராணுவ படையினரும், 9,000 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க ஹரியானா, பஞ்சாபில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பஞ்சாப், ஹரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டக்கில் பேருந்து, ரயில் சேவைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ராம் ரஹீமிற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications