சசிகலாவை சந்திக்க முதல்முறையாக அனுமதி மறுப்பு... அப்படியே ஷாக்கான தினகரன்
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டது.
பெங்களூர் சிறையில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறை துறை டிஐஜியாக ரூபா அம்பலத்தினார். மேலும் சசிகலாவும், இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு ஹாயாக வரும் வீடியோ காட்சிகளு்ம வெளியாகின.

மேலும் சசிகலாவை அதிகமான பார்வையாளர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் பெரும்பாலும் நேரம் தவறியே வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
சிறை முறைகேட்டில் தொடர்புடைய இரு அதிகாரிகளும், அதை அம்பலப்படுத்திய பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி வினய் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த புகார்களுக்கு பிறகு, முதல்முறையாக சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் புறப்பட்டார். அங்கு சிறைக்கு சென்ற அவரது காரை 500 மீட்டர் தூரத்திலேயே நிறுத்துமாறு காவலர்கள் கூறியதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு நடந்தே சிறை உள்ள வளாகத்துக்குள் சென்றார். அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொதுவாக சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தான் சந்திக்க முடியும்.
ஆனால் தினகரன் நேரம் தவறி வந்ததால் அவருக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதால், விதிமுறைகளில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளவில்லை. இதனால் அரை மணி நேரம் காத்திருந்து விட்டு சென்றுவிட்டார். இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications