மே வங்க தேர்தல்.. திடீர் வன்முறை, துப்பாக்கிச்சூடு.. சிதால்குர்ச்சியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சிதால்குர்ச்சி சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடி 126இல் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
மேற்கு வங்கத்தில் இன்று காலை நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இன்று அங்கு 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மதியம் ஒரு மணி வரை வங்கத்தில் 52.89 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

அங்கு கூச் பிகார் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி எண் 126இல் திடீரென வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த சிஆர்பிஎப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு காரணமாக சிதால்குர்ச்சி சட்டமன்ற தொகுதியின் வாக்குச் சாவடி 126ல் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கிருந்த சிறப்புப் பார்வையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ள கூச் பெகர் மாவட்டத்தில் நாளை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 91 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications