மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக- சிவசேனா, காங்- பவார் கூட்டணிகள் முறிவால் 4 முனை போட்டி!
மும்பை: தொகுதி பங்கீட்டில் இழுபறி, முதல்வர் பதவி யாருக்கு, யார் பெரிய கட்சி என்ற ஈகோ ஆகியவற்றால் மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணியும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்துள்ளன. இதனால் சட்டசபை தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15- தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

இம்மாநிலத்தில் தற்போது ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங். கூட்டணி சார்பில் முதல்வராக காங்கிரஸின் பிருதிவ்ராஜ் சவான் உள்ளார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் உள்ளார். கடந்த 15 ஆண்டுகாலமாக இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்து வருகிறது.
இத்தேர்தலுக்கும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முயற்சித்தன. ஆனால் சரிபாகுதி தொகுதிகளையும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையும் தேசியவாத காங்கிரஸ் முன்வைத்ததை காங்கிரஸ் நிராகரிக்க இந்த கூட்டணி உடைந்தது.
இதேபோல் பாஜக-சிவசேனா கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையால் 25 ஆண்டுகால கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் 4-ம் தனித்தனியே களம் காண்பதால் மகாராஷ்டிரா அரசியல் களம் பெரும் பரபரப்பாக இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications