வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை! சட்டம் கொண்டுவருகிறது மத்திய அரசு
டெல்லி: தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சப் பணம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளது.
தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, தங்க நகை, ஆடைகள், பரிசுபொருட்கள் அளித்து வாக்கு கேட்கும் கலாசாரம் இந்தியாவில் வேகமாக பரவி நீக்கமற நிறைந்துவிட்டது.

வாரண்ட் வேண்டும்
தற்போதைய சட்டப்படி, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருள் லஞ்சமாக கொடுப்பது குறித்து புகார் செய்யப்படுவதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஒரு இடத்தில் ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உறுதியான தகவல் வந்தாலும், ‘வாரண்ட்' இல்லாமல் அந்த இடத்தை சோதனை போட முடியாத நிலை உள்ளது.

தேர்தல் கமிஷன் கோரிக்கை
எனவே, 2012ம் ஆண்டிலேயே இதற்கான சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது. வேறு யாரும் புகார் தராமலேயே, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நேரில் காணும் தேர்தல் அதிகாரி, தாமே முன்வந்து வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் வழங்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்க வகை செய்யும்படி சட்டத்தை திருத்த வேண்டும் என்பதும் தேர்தல் கமிஷனின் கோரிக்கை ஆகும்.

சட்டம் தயாராகிறது
இந்த தேர்தல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள தகவலில், குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தப் பணியை தொடங்கி உள்ளதாகவும், இது தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்கும்படி சட்டத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில்..
புதிய சட்ட திருத்த மசோதா வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களை புகார் இல்லாமல் தேர்தல் அதிகாரி நேரில் பிடித்து வழக்கு பதிவு செய்ய முடியும். புகாரை பெறும் போலீசார், ‘வாரண்ட்' இல்லாமல் குற்றவாளியை கைது செய்து, கோர்ட்டு அனுமதி இல்லாமல் விசாரணையை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications