வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது... டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற டிசம்பர் 15 வரை காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது
டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை குடிநீர், மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
-குடிநீர்க் கட்டணம், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம்.
-500, 1000 ரூபாய் நோட்டுக்களை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்
-நள்ளிரவுக்கு மேல் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது
-நள்ளிரவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது நிறுத்தப்படும்
-பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்
-500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யத் தடை இல்லை
-மத்திய, மாநில, அரசு பள்ளி, கல்லூரிகளில் ரூ2000 வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கட்டணம் செலுத்தலாம்
-பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி 500 ரூபாய் வரை ப்ரீபெய்டு மொபைல்களுக்கு டாப் அப் செய்து கொள்ளலாம்.
-வெளிநாட்டினர் தங்களது நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ.5000 என்ற அளவில் தங்களது பாஸ்போர்ட்டுகளை காண்பித்து வாங்கிக் கொள்ளலாம்.
-பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி டிசம்பர் 3 முதல் டிசம்பர் 15 வரை சுங்க கட்டணம் செலுத்தலாம்
-கூட்டுறவு அங்காடிகளில் ஒரே நேரத்தில் மட்டும் ரூ5000 வரை பொருட்களை வாங்கலாம்
-டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications