குஜராத் சட்டசபை தேர்தல் : ஆறு வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் வாக்குப்பதிவு
அகமதாபாத் : குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகள் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. குஜராத் மாநிலத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜ.க.,வும், எப்படியாவது இந்த முறை குஜராத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துவிட வேண்டுமென காங்கிரஸும் தீவிரமாக களத்தில் வேலை பார்த்து உள்ளன.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதனால் குஜராத் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டது.
இதுகுறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி சுவான் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு தொழிற்நுட்ப கோளாறுகளால் வட்காம், விராம்கம் தொகுதியில் தலா இரண்டு வாக்குச்சாவடிகளிலும், தஷ்க்ரோய் மற்றும் சவிலி தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவித்து இருந்தார்.
மேலும், நாளை நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையில் விசாக் நகர், மொடாசா உள்ளிட்ட ஏழு தொகுதிகளில் உள்ள பத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்காளர் ஒப்புகைச்சீட்டோடு பொருத்தி பார்க்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
இதையடுத்து இன்று குறிப்பிட்ட ஆறு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications