வாட்ஸ்அப் முடங்கிய நேரத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. போனிலுள்ள விவரங்களை அபேஸ் செய்தது அம்பலம்
உலகின் பெரும்பாலான பகுதிகளில் வாட்ஸ்அப் திடீரென்று வேலை செய்யாமல் போன நேரத்தில், பலரது மொபைல்களில் ஹேக்கர்ஸ் தங்களது வேலையை காட்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: பிரபலமான அப்ளிகேஷனான வாட்ஸ்அப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனது. இந்தியா மற்றும் சில நாடுகளில் வாட்சப் திடீரென்று வேலை செய்யாமல் நின்று போனது .
பலரும் இது குறித்து பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகியிருக்கிறது.மேலும் சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின் தற்போது மீண்டும் வேலை செய்ய தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் அந்த ஒரு மணிநேரத்தை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயணப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்படி மிகவும் நூதனமாக பலரது வாட்சப் தகவல்களை கொள்ளை அடித்து இருக்கின்றனர்.

நின்று போன வாட்சப்
நேற்று மதியம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென்று வாட்ஸ்அப் அப்ளிகேஷன் வேலை செய்யாமல் நின்று போனது. அதன்படி நாம் அனுப்பும் மெசஜ்கள் யாருக்கும் செல்லாமல், பிறர் அனுப்பும் மெசஜ்கள் நமக்கு வராமல் இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு வாட்சப் ஓபன் செய்ததும் 'கனெக்டிங்' என்ற வார்த்தை மட்டும் வந்து இருக்கிறது. அதன்படி இந்தியா, சிங்கப்பூர் , ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்சப் செயல் இழந்து இருக்கிறது.
|
ட்ரெண்ட் ஆனா விஷயம்
இதையடுத்து குழம்பிப் போன வாட்ஸ்அப் பயனாளர்கள் உடனடியாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதம் செய்ய தொடங்கினார். அதில் உலகம் முழுக்க நிறைய பேருக்கு இந்த பிரச்சனை வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் வாட்சப் வேலை செய்யவில்லை. வாட்சப் செயல் இழந்த விஷயத்தை சிலர் டிவிட்டர் பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் சரியானது
சரியாக அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு பின் வாட்சப் மீண்டும் சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. இதற்கு புதிய காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சில நாட்களாக நிறைய அப்டேட்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வாட்சப் நிறுவனம் வெளியிட இருக்கிறதாம். மேலும் அதில் நிறைய வித்தியாசமான வசதிகளை ஏற்படுத்த இருக்கிறதாம். அதை சோதனை செய்யும் போது தவறுதலாக இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அப்டேட் என்ன
இதன்படி வாட்ஸ்அப் வெளியாக இருக்கும் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இனி பேஸ்புக் போலவே வாட்சப்பில் லைவ் வீடியோ ஷேரிங் செய்ய முடியும் எனவும், வாட்சப் மூலமாக வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குரூப் வீடியோ கால் வசதியும் வர இருக்கிறது. மேலும் கூகுள் அலோ, ஆப்பிள் சிரி போன்ற தொழில்நுட்பம் குறித்தும், அது போன்று வாட்சப்பில் ஏற்படுத்தவும் ஆராய்ந்து வருகிறது. இதன் காரணமாகவே வாட்சப் செயல் இழந்து இருக்கிறது.

உலகம் முழுக்க ஹேக்கர்கள் கைவரிசை
நேற்று சில ஹேக்கர்கள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு வசதியாக பயன்படுத்தியது தெரியவந்து இருக்கிறது. அதன்முலம் வாட்ஸ்அப் பெயரில் "வாட்சப் ஐஎன்சி'' என வாட்சப் போலவே ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி பிளே ஸ்டோரில் வைத்து இருக்கிறார்கள். நேற்று வாட்சப் வேலை செய்யாததால் பலர் அதை டெலிட் செய்துவிட்டு மீண்டு இன்ஸ்டால் செய்யும் போது தவறுதலாக இந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்து இருக்கிறார்கள்.

எல்லாம் போச்சு
இதன் காரணமாக லட்சக்கணக்கில் பலருடைய தகவல்கள் அந்த ஹேக்கர் குழுவிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்களது மொபைல் எண்ணை எங்கெல்லாம் கொடுத்து வைத்து இருக்கிறார்களோ அதுகுறித்த தகவலும் தற்போது அவர்கள் கைக்கு சென்று இருக்கிறது. இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டாம் என வாட்சப் நிறுவனம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications