பள்ளி கூடத்தில் செய்யும் வேலையா இது! டீச்சருடன் ஸ்டோர் ரூமில் சிக்கிய “ஹெட் மாஸ்டர்”! வைராலான வீடியோ
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியையுடன், தலைமை ஆசிரியர் ஸ்டோர் ரூமில் உடலுறவு கொண்ட வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்கேர் மாவட்டத்தில் உள்ள இந்திரபிரஸ்தா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக ராஜேஷ் பால் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவரோடு அதே பள்ளியில் ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்த காலத்தில் அனைத்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த மூடப்பட்டபோதும் பள்ளி ராஜேஷ் பால் மற்றும் ஆசிரியை அலுவலக பணி இருப்பதாக கூறி தினமும் வந்துள்ளனர்.

பள்ளியில் அத்துமீறல்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பள்ளி வளாகத்தில் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை பள்ளியில் உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் ஸ்டோர் ரூமில் உடலுறவில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. விசாரணையில் அரசு பள்ளி வளாகத்தில் அத்துமீறலில் ஈடுபட்டது இந்திரபிரஸ்தா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரான ராஜேஷ் பால் மற்றும் ஆசிரியைதான் என்பது தெரிய வந்தது.

தலைமை ஆசிரியரின் வீடியோ
தலைமையாசிரியர் ராஜேஷ் பால் மற்றும் ஆசிரியை பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தன்குமாரிடம் கிராம மக்கள் புகார் அளித்ததையடுத்து விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த கிராம மக்கள் பள்ளியில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து, அதை அறியவே நாங்கள் வீடியோ எடுத்தோம் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராம மக்கள் புகார்
அதேநேரம் அந்த வீடியோவை வைத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றதாகவும், இது தொடர்பாக அவர்கள் அவர்கள் பேசிய அந்த ஆடியோவில் தயவுசெய்து வீடியோவை வெளியிடவேண்டாமென அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பள்ளியில் நடக்கும் சம்பவத்தை மோப்பம் பிடித்த சில கிராம மக்கள், பள்ளியில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை
முன்னதாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை தாங்கள் ஏற்கெனவே எச்சரித்ததாகவும், "அந்த இதுபோன்ற தவறான செய்கைகளில் ஈடுபடாதீர்கள். இல்லையெனில் பள்ளியை விட்டு நீங்களாகவே சென்று விடுங்கள்' பலமுறை சொன்னோம். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. தொடர்ந்து அவர் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் புகார் குறித்து விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications