ஆமா..குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் ஜெயிக்க காரணம் என்ன? சூடான தகவலோடு வெளியான ஆய்வு முடிவு
காந்தி நகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி அக்கட்சிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பிம்பத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் இப்படியொரு அசுரத்தனமான வெற்றியை பாஜக பெற்றிருப்பதற்கு காரணங்கள் என்ன என்பது குறித்து லோக் நிதி சமூக வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (Lokniti-Centre for the Study of Developing Societies) சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரம் வருமாறு:

வரலாற்று வெற்றியை பரிசளித்த மும்முனை போட்டி
கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் பெற்றதை காட்டிலும் இந்த முறை 3 சதவீதம் மட்டுமே அதிக வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறும் 3 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று 157 தொகுதிகளில் பாஜகவால் எவ்வாறு வெற்றி பெற முடிந்தது? இதற்கு ஆம் ஆத்மியின் வருகை முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் காங்கிரஸ் அறுவடை செய்வதை தடுத்த அதில் பாதியை தன் வசம் ஆக்கிக்கொண்டது ஆம் ஆத்மி. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற 12 சதவீத வாக்குகளும் காங்கிரஸுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் தான். ஆம் ஆத்மி ஏற்படுத்திய இந்த மும்முனை போட்டியே பாஜகவுக்கு இந்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பரிசு அளித்துள்ளது.

மோடி மீதான அசாத்திய நம்பிக்கை
பாஜக மீதும் நரேந்திர மோடி மீதும் குஜராத் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் இல்லை என்பதே குஜராத் தேர்தல் கூறும் மற்றொரு செய்தி ஆகும். குஜராத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற எத்தனையோ பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஆனால், அந்தப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகளால் தீர்க்க முடியாது.. நரேந்திர மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை பெரும்பாலான குஜராத் மக்களுக்கு இருக்கிறது. அதனால்தான், இத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

கட்சியை பார்த்து வாக்களித்த மக்கள்
நடந்து முடிந்த குஜராத் தேர்தலை பொறுத்தவரை, வேட்பாளர்களை காட்டிலும் கட்சிகளுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதிலும் பாஜக தான் முன்னிலையில் உள்ளது. அதாவது பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 10-இல் 7 பேர் கட்சிக்காகவே வாக்களித்துள்ளனர். வேட்பாளர்களை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. காங்கிரஸுக்கு வாக்களித்தவர்களில் 10-இல் 6 பேர் மட்டுமே கட்சிக்காக வாக்களித்திருக்கிறார்கள். 4 பேர் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். ஆம் ஆத்மிக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர்.

கைக்கொடுத்த பிரச்சாரம்
இந்த குஜராத் தேர்தலை பொறுத்தவரை, கட்சிகளின் பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சாரம் என்று எடுத்துக்கொண்டால் குஜராத்தில் பாஜகவே முன்னிலையில் இருந்தது. அதன்படி, பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் பாதி பேர் கடைசி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்க நினைத்து, பாஜகவின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். பாஜகவுக்கு வாக்களித்த மக்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்கூட்டியே பாஜகவுக்கு தான் எனது ஓட்டு என முடிவு செய்தவர்கள். இவ்வாறு காங்கிரஸுக்கு தான் எனது ஓட்டு என முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மிக சொற்பமான பேரே உள்ளனர். எனவே, பாஜகவின் தேர்தல் பிரச்சாரமே அக்கட்சிக்கு முக்கிய பலமாக இருந்திருக்கிறது.

பிராந்தியங்கள் அளித்த வெற்றி
மற்ற மாநிலங்களை போல அல்லாமல், குஜராத்தில் ஓரிரு பிராந்தியங்கள் தான், மாநிலத்தில் யார் ஆட்சியை அமைக்கப்போவது என்பதை தீர்மானிக்கின்றன. அதில் முதலாவது சவுராஷ்ட்ரா பிராந்தியம். இந்த பிராந்தியத்தை ஆரம்பத்தில் இருந்தே குறிவைத்து அங்கு பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. இங்கு காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து பெற்றிருக்கும் வாக்கு சதவீதத்தை தனியொரு கட்சியாக பாஜக பெற்றிருக்கிறது. இதேபோல, வடக்கு மற்றும் மத்திய குஜராத் பிராந்தியங்களிலும் பாஜக ஏராளமான தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

இளைஞர்கள் வாக்கு
இவை ஒருபுறம் இருக்க, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை பாஜக கவர்ந்ததுதான் குஜராத்தில் அக்கட்சி பெற்றிருக்கும் வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல், நடுத்தர வயதினர் (46-55) பெரும்பாலானோரும் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இளைஞர்களும், நடுத்தர வயதினரும் தான் குஜராத்தில் அதிகம் என்பதால் இதுவும் பாஜகவுக்கு சாதகமாகிவிட்டது. இந்த வயதினரை கவர காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தவறிவிட்டது.

வெற்றிக்கு மகுடம் பதித்த படித்தவர்கள் வாக்கு..
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முறை படித்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு செலுத்தியுள்ளது அக்கட்சியின் வெற்றிக்கு மகுடமாக இருப்பாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் நகர்ப்புறங்களில் சுனாமி அலை போல வாக்குகளை வாரிச் சென்றிருக்கிறது பாஜக. ஒருகாலத்தில், படித்தவர்களின் ஓட்டுகள் காங்கிரஸுக்கு தான் விழும் என்ற நிலை குஜராத்தில் இருந்தது. ஆனால் அதை தலைகீழாக தற்போது மாற்றியுள்ளது பாஜக. அதேபோல், இந்த முறை தங்களுக்கான உயர் ஜாதி வாக்குகளை பாஜக அதிகரித்துள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக வாக்குகளும் பாஜகவுக்கு அதிகமாக கிடைத்துள்ளன. அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் வாக்குகள் கடந்த தேர்தலை ஒப்பிடும் போது பாஜகவுக்கு 27 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக சரிந்திருக்கிறது. காங்கிரஸுக்கோ இஸ்லாமியர் வாக்குகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், பாஜகவின் வெற்றியை இது தடுக்கவில்லை என்பதே கள ஆய்வு முடிவுகளாக இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications