ரோஹிங்யா முஸ்லீம்கள் விவகாரம்.. மத்திய அரசின் பிரமாண பத்திரம் லீக்கானது எப்படி?
டெல்லி: ரோஹிங்யா முஸ்லீம்கள் தொடர்பாக எந்த ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார்.
மியான்மரில் நடைபெற்றுவரும் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு தாக்குதல்களுக்கு அஞ்சி பலரும் இந்தியாவில் அகதிகளாக வந்து குடியேறுகிறார்கள். அவர்களை இந்திய அரசு திருப்பியனுப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுக்க கோரி 2 ரோஹிங்யா முஸ்லீம்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை வரும் 18ம் தேதி கோர்ட் விசாரிக்க உள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு தனது பதிலை பிரமாண பத்திரமாக தயாரித்து நேற்று தாக்கல் செய்ததாக ஒரு தகவல் வெளியானது. அந்த பிரமாண பத்திரத்தில், ரோஹிங்யா முஸ்லீம்கள் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அத்தகவலை கிரன் ரிஜிஜு மறுத்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், மத்திய அரசு அதுபோன்ற பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை எனவும், திங்கள்கிழமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதேநேரம் மீடியாக்களில் வெளியான தகவலில் உண்மையுள்ளது. ஏனெனில், கோர்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு தயாரித்த, மாதிரி பிரமாண பத்திரம்தான் லீக் ஆகியுள்ளது.
மீடியாவில் லீக் ஆகிவிட்டதால் பிரமாண பத்திரத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு திங்கள்கிழமை அதை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. குறிப்பாக தீவிரவாதிகள், ரோஹிங்யாக்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதற்கான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications