புதிய அணிதான் தொடங்கப்போறேன்... தனிகட்சியில்லை - டிடிவி தினகரன்
நாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, புதிய அணி தான் என ஆர் கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி. தினகரன் கூறி உள்ளார்.
Recommended Video

டெல்லி: மதுரையில் எங்களது அணியின் பெயரை நாளை அறிவிக்க உள்ளோம் என்று தினகரன் கூறியுள்ளார். புதிய அணி தான் தொடங்கப் போகிறோம் புதிய அணி அல்ல என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் புதிய அமைப்பை தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.

பிரம்மாண்ட விழா
புதிய அமைப்பு மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் நாளை காலை நடைபெற உள்ளது. மேலூர்-அழகர் கோவில் ரோட்டில் எஸ்.பி.ஆர். திடலில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கொடி ஏற்றும் தினகரன்
லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா திடலில் 100 அடி உயர கம்பம் நடப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் தினகரன் பங்கேற்று புதிய அமைப்பின் பெயர், கொடியை அறிமுகம் செய்து பேசுகிறார்.

அணியின் பெயர்
அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
இதில் கொடுக்கும் பெயர்களை தனது அணியின் பெயராக அறிவிப்பார் தினகரன்.

மதுரையில் கூட்டம்
இந்த நிலையில் டிடிவி தினகரன் நாளைய தினம் புதிய அணியின் பெயரை மட்டுமே அறிவிக்கப் போவதாகவும், புதிய கட்சி தொடங்கவில்லை என்றும் டெல்லியில் கூறியுள்ளார். நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

ஜெயலலிதா உருவம்
டிடிவி தினகரன் ஏற்கனவே கறுப்பு வெள்ளை சிவப்பு நிறம் கொண்ட கொடியை பயன்படுத்தி வருகிறார். புதிய அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனது ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications