இளையராஜா - எஸ்.பி.பி. பிரச்சினை விரைவில் தீர வேண்டும்.. வெங்கய்யா நாயுடு நம்பிக்கை
காப்புரிமை தொடர்பாக இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்
டெல்லி: இளையராஜா இசையமைத்த பாடல்களை இசைக் கச்சேரிகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என்று விவகாரம் குறித்து விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது. மீறி பாடினால் அபராதத்தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் என்று இளையராஜா சார்பில் எஸ்பிபி, பாடகி சித்ரா, எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், தன்னுடைய இசைக் கச்சேரிகளில் இளையராஜாவின் பாடல்களை பாடப் போவதில்லை என்று அவர் அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
I was surprised hearing controversy surrounding Sh SP Balasubrahmanyam singing Sh Ilayaraja compositions. Hope it gets positively resolved.
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 20, 2017
இளையராஜாவின் இசை- பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு சட்டப்படி சேர வேண்டிய ராயல்டியைத் தர மறுப்பது ஏன் என்று இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளையராஜாவின் இசையையும், பாடகர் எஸ்.பி.பி.யின் பாடல்களையும் பிரித்து பார்க்க முடியாதது. இளையராஜாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே உள்ள காப்புரிமை தொடர்பான பிரச்சினை குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்று தனது பதிவில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications