அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன
காந்திநகர்: வானில் இருந்து பறந்து வந்த பந்து வடிவிலான பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தி நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளனர்.
விண்வெளியில் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கினற்ன. இதுகுறித்து தினமும் உலகம் முழுவதும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
வேற்றுகிரக வாசிகள், எலியன்கள், பறக்கும் தட்டுக்கள் என பல்வேறு விஷயங்கள் இன்றும் புரியாத புதிராக தான் உள்ளது. இந்நிலையில் தான் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

பறந்து வந்த மர்மபொருள்
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பால்ஜி, காம்போல்ஜ், ராம்புரா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் 15 கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மாலையில் 3 கிராமங்களிலும் வானில் இருந்து பறந்து வந்த மர்மபொருள் ஒன்று அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் விழுந்தன.

தலா 5 கிலோ எடை
இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பொருள் வட்டவடிவில் இரும்பு பந்து போன்று இருந்தது. அதனை தொட பொதுமக்கள் அச்சமடைந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பால்ஜ் கிராமத்தில் விழுந்த பந்து வடிவிலான பொருள் 5 கிலோ எடையுடன் இருந்தன. மற்ற கிராமங்களில் விழுந்த பொருட்களும் தலா 5 கிலோ எடையுடன் தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.

செயற்கோள் பாகங்களா?
இந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛வானில் இருந்த வந்த பந்து வடிவிலான பொருட்கள் செயற்கோள்களில் இருந்து பிரிந்த பாகங்களாக இருக்கலாம்'' என தெரிவித்தனர்.

எஸ்பி கூறுவது என்ன?
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அஜித் ராஜியன் கூறுகையில், ‛‛பால்ஜ் கிராமத்தில் மாலை 4.45 மணிக்கு முதன் முதலாக மர்மபொருள் விழுந்தது. அதன்பிறகு மற்ற 2 கிராமங்களில் விழுந்துள்ளது. காம்போல்ஜ் கிராமத்தில் மட்டும் வீட்டில விழுந்தது. பிற 2 கிராமங்களில் வெட்டவெளியில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காயம், உயிர் சேதம் ஏற்படவில்லை. இது எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் விண்வெளிக்கு அனுப்பிய சாதனங்களில் இருந்து பிரிந்த பொருட்களாக இருக்கலாம்'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications