இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி 17 வயது சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மீர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ரிகோ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் படிப்பை நிறுத்தி அந்த சிறுமி வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வெளியே வராத நிலையில் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

சிறுமி தற்கொலை
இதையடுத்து சிறுமி குறித்து அருகில் இருந்தோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்கள் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை கடிதம்
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலை செய்து கொண்ட சிறுமி தற்கொலைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு எழுதி வைத்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் தன்னை அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திர குமார் கார்த்திக் ஆகிய இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு மிரட்டல்
மேலும் அந்த இருவரும் தன்னை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, இதை வெளியே கூறினால், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர் எனவும், இதனால் தான் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக அந்த சிறுமி தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

போலீசார் விசாரணை
இதையடுத்து சந்தேக மரண வழக்கை, பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான கார்த்திக் மற்றும் மகேந்திர குமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பாலியல் வன்கொடுமை காரணமாக சிறுமிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications