குண்டுவெடிப்பு சம்பவங்கள்: உலகின் 3வது ஆபத்தான நாடு இந்தியா
டெல்லி: குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் அதிகம் நடக்கிறதாம். குண்டுவெடிப்புகளை பொறுத்த வரையில் உலகின் 3வது அபாயகரமான நாடு இந்தியா தானாம்.
தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 212 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை விட அதிகம் ஆகும்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு 108 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஈராக்கை அடுத்து இந்தியாவில் தான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றது.

வங்கதேசம், சிரியா
உள்நாட்டு பிரச்சனையால் தவிக்கும் வங்கதேசத்தில் 75 குண்டுவெடிப்புகளும், சிரியாவில் 36 குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

எண்ணிக்கை குறைவு
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 241 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 212 ஆக குறைந்துள்ளது.

பலி
குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தபோதிலும் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் குண்டுவெடிப்புகளால் 130 பேர் பலியாகினர், 466 பேர் காயம் அடைந்தனர். 2012ல் 113 பேர் பலியாகினர், 419 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்புகள்
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் சராசரியாக 298 அதிநவீன குண்டுகள் வெடித்து 1,337 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகம். ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 2010ம் ஆண்டில் அதிகபட்சமாக 209 அதிநவீன குண்டுகள் வெடித்துள்ளன.

பாகிஸ்தான், ஈராக்
பாகிஸ்தான், ஈராக், இந்தியா ஆகிய நாடுகளில் தான் உலகின் 75 சதவீத குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கிறதாம். உலகின் பிற பகுதிகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளில் 69 சதவீதம் பொதுமக்களை குறி வைத்து நடக்கிறது. ஆனால் இந்தியாவில் 58 சதவீத குண்டுவெடிப்புகள் பொதுமக்களை குறி வைத்து நடத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு உடைமைகளை குறி வைத்தே நடத்தப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications