இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Prachand இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் விமானப் படையில் இணைக்கப்பட்டது!
ஜோத்பூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Prachand என பெயரிடப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் அண்மையில் இணைக்கப்பட்டது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்தது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் படிப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் ஒரு உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர் இன்று விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயரமான மலைகளில் பறக்கக் கூடியதாக இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில், மழை காலங்களில் அடர் காடுகளில் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். மொத்தம் 5.8 டன் எடை கொண்டது இந்த இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர். ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பொருத்தி இந்த ஹெலிகாப்டரில் இருந்து தாக்குதல் நடத்தலாம்.
ரூ3,887 கோடி மதிப்பிலான 15 ஹெலிகாப்டர்கள் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. விமானப் படைக்கு 10 ஹெலிகாப்டர்களும் ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இந்த Prachand என பெயரிடப்பட்ட ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படையில் இந்த ஹெலிகாப்டர் இணைக்கப்படுட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமான படை தளபதி சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பில் விமானப் படை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் பாதுகாப்பை விமானப் படை வலிமையாக்கி உள்ளது. தற்போது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் நாட்டின் விமானப் படையின் வலிமை கூடுதலாகும். 1999 கார்கில் யுத்த காலத்திலேயே நமக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தேவையானதாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகால ஆராய்ச்சி, மேம்பாட்டின் விளைவாக இன்று நாம் தாக்குதல் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளோம் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications