பாகிஸ்தானின் முப்படைகள் கண்ணிலும் மண்ணை தூவி, இறங்கி அடித்த இந்திய ராணுவம் #indianarmy
டெல்லி: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.
யூரி தாக்குதல் நடைபெற்ற பிறகு, கடந்த 10 நாட்களாக, பாகிஸ்தானின் முப்படைகளும், உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசு கண்டிப்பாக பதிலடி தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது.

இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமாபாத் நகர் மீது போர் விமானங்களை பறக்கச் செய்து பாகிஸ்தான் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது பாகிஸ்தான் அரசு. இந்திய ராணுவத்தால் நம் மீது தாக்குதல் நடத்த முடியாது, நமது ராணுவம் பலமானது என்று பாகிஸ்தான் மக்களுக்கு காண்பிப்பதற்காக போர் விமானங்களை பறக்கவிட்டது பாகிஸ்தான்.
மேலும், காஷ்மீர், ராஜஸ்தான் மாநில பாகிஸ்தான் எல்லையில் கூடுதல் ராணுவத்தினரை குவித்து, இந்தியா பதிலடி அளிக்காமல் தடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தானின் முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன. பாகிஸ்தானின் ரேடார்கள் இந்திய எல்லையில் இருந்து விமானங்கள் நுழைகிறதா என்பதை கண்காணித்தபடி இருந்தன.
இத்தனை முன்னேற்பாடுகளுக்கு நடுவேயும், இந்திய ராணுவம் விமானம் மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் பாரசூட் மூலம் குதித்து, தங்களது இலக்கான தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்திவிட்டு, வெற்றிகரமாக எந்த பாதிப்பும் இன்றி தாய் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளது.
இந்த தாக்குதலில் விமானப்படையுடன், சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலக்கை சரியாக தாக்கி அழித்துவிட்டு, எந்த வித இழப்புமின்றி வீர நடை போட்டு திரும்பி வந்துள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள். அதாவது, பாகிஸ்தானின் முப்படைகள் கண்களிலும் மண் தூவப்பட்டுள்ளது.
பொக்ரானில் யாருக்கும் தெரியாமல் அணு குண்டை சோதித்து பார்த்து அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்த, இந்தியாவுக்கு, இந்த தாக்குதல் ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானோ இப்போது அலற ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற இந்திய ராணுவ ஜெனரல் ஜி.டி.பக்ஷி கூறுகையில், மியான்மரில் புகுந்து இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழித்ததை போல பாகிஸ்தானில் தாக்குதலை நடத்த முடியாது என்று பலரும் கருத்து கூறிவந்தனர். ஆனால், இந்திய ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் எந்த இலக்கையும் தாக்கி அழிக்க வல்லவர்கள். இன்று இந்திய ராணுவம் தனது தீரத்தை உலகத்திற்கு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது என்றார்.
-
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல












Click it and Unblock the Notifications