இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த அசோக் நியமனம்
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய எண்ணை சந்தைப்படுத்துதல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பொரேசனுக்கு புதிய தலைவராக சென்னையை சேர்ந்த பி.அசோக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக பி.அசோக் நியமிக்கப்படுகிறார். ஜூலை 16ம்தேதி முதல் அவர் தனது பதவிக்காலத்தை தொடங்கியுள்ளார். இதற்கு முன்பாக, சில்லரை விற்பனையின் செயல் இயக்குனராக டெல்லியில் பணியாற்றிவந்தார். அதற்கு முன்பாக, நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய வர்த்தக பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மெட்ராஸ் பல்கலை. மாணவர்
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டம் பெற்ற அசோக், மேலாண்மை திறமை குறித்த முதுகலை படிப்பை, தேசிய மேலாண்மை மேம்பாட்டு இன்ஸ்ட்டிடியூட் மூலம் பெற்றார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனுபவம் மிக்கவர்
ஆயில் மற்றும் காஸ் தொழிலில் 33 வருடத்துக்கும் மேலான அனுபவம் அசோக்கிற்கு உள்ளது. இந்திய ஆயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆயில் வர்த்தக நிறுவனமாகும். இதன் விற்பனை வருவாய் ரூ.473210 கோடிகள். 2013-14ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின், நிகர வருவாய் ரூ.7019 கோடிகளாகும்.
9 ஆண்டுகளுக்கு பிறகு
2005ம் ஆண்டு ராமச்சந்திரன் இந்தியன் ஆயில் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து வந்த சார்தக் என்பவருக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் ஆயில் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மோடியின் முதல் பெரிய முடிவு
கடந்தாண்டு அக்டோபர் 9ம்தேதியே அசோக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முந்தைய காங்கிரஸ் அரசு இவரது நியமனத்தை உறுதி செய்யவில்லை. மோடி அரசு வந்த பிறகு இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனத்தின் முக்கிய பதவியொன்றை நிரப்பியது மோடி அரசுக்கு இது முதல் முறை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications