பிளாஸ்டிக் பாட்டிலை ஒழித்தால் காசு.. வதோரா ரயில்வே ஸ்டேசனில் புதிய இயந்திரம் அறிமுகம்
பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்கும் நோக்கத்தில் வதோரா ரயில் நிலையத்தில் புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வதோரா: பழைய பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் அதன் எடைக்கு ஏற்ப பணத்தைத் தரும் புதிய இயந்திரம் வதோரா ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒருகட்டமாக குஜராத் மாநிலம் வதோராவில் உள்ள ரயில் நிலையத்தில் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க புதிய இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது, பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால், அவற்றை சுக்கு நூறாக உடைத்து தரும்.
தங்களால் இயன்ற அளவு, பொதுமக்களும் இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை போடலாம். அதன் எடைக்குத் தகுந்தவாறு பணம் தரப்படும்.
அதாவது, பிளாஸ்டிக் பாட்டில்களை அந்த இயந்திரத்தில் போட்டவர்கள், தங்களது மொபைல் எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஒரு பாட்டிலுக்கு ரூ. 5 என்ற கணக்கில் அவர்களுக்குரிய பணம், பேடிஎம் (Paytm) மூலம் வரவு வைக்கப்படும்.
உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்திற்கு வதோரா ரயில் நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications