புதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன.
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன.
ஜியோ 4ஜி மொபைல் போன் ரூ.0 விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்க 1,500 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை 3 ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜியோ 4ஜி மொபைல் போன் இலவசமாக கிடைக்க உள்ளது.

செப்டம்பரில் விற்பனை
இலவச ஜியோ 4ஜி மொபைலுக்கான புக்கிங் வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.

ஜியோ கீபோடு
இந்நிலையில் இந்த ஜீரோ காஸ்ட் போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது மற்ற பேசிக் மாடல் மொபைல்களில் இருப்பது போன்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் நம்பர்களுடன் கூடிய கீபேடை கொண்டுள்ளது இந்த ஜியோ போன்.

எஃப்எம், டார்ச் லைட்
2.4 இஞ்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே மற்றும் எஃப்எம் ரேடியோவை இந்த போன்கள் கொண்டுள்ளன. மேலும் டார்ச் லைட் வசதியும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெமரி கார்டு ஸ்லாட்
ஹெட்ஃபோன் ஜாக் வழங்கப்படும் என்றும் மெமரி கார்டு போடுவதற்கான ஸ்லாட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜரும் போனுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


ஜியோ செயலிகள்
நான்கு வழி நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மற்ற போன்களில் உள்ளதை போன்ற போன் காண்டாக்ட்ஸும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. கால் ஹிஸ்டரி மற்றும் ஜியோ போனின் செயலிகளும் இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது.

மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர்
வழக்கமாக போன்களை போல் மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி மொபைலில் ஜியோ தன் தனா ஆஃபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

ரீசார்ஜ் பேக்குகள்
இதோடு, 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications