ரூ.2 ஆயிரம் கோடி மான நஷ்ட ஈடு கேட்டு பத்திரிகைகளுக்கு இன்போசிஸ் நோட்டீஸ்
பெங்களூர்: நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக கூறி இன்போசிஸ் நிறுவனம் சார்பில் மூன்று ஆங்கில பத்திரிகைகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ். இதன் முன்னணி மேலாண்மை குழுவில் இருந்த அதிகாரிகள் சிலர் நிறுவனத்தை விட்டு சமீபத்தில் வெளியேறினர்.

இதையடுத்து புதிய தலைமை அலுவலரை நியமிக்க இன்போசிஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் குறித்து விமர்சனம் செய்து சில மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன.
இந்த செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இன்போசிஸ், அந்த மீடியாக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி எக்கனாமிக் டைம்ஸ், தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இன்போசிஸ் சார்பில் மான நஷ்டமாக ரூ.2ஆயிரம் கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அம்மூன்று பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் ஆட்சேபத்துக்குறிய கட்டுரைகளை சுட்டிக்காண்பித்து, அதை இன்னும் 24 மணி நேரத்தில் நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications