உதய்பூரில் இஷா அம்பானி திருமண வைபோகம்.. வாவ்வ்வ்வ்வ் ஏற்பாடுகள்.. லிஸ்ட்டை பாருங்க!
உதய்பூர்: உலகமகா பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் ஆகியோர் நடுவே நடைபெறவுள்ள திருமணத்துக்கு முந்தையதாக ஏற்பாடுகளால் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் ஆகியோர் நடுவே வரும் 12ஆம் தேதி மும்பையில் வெகு பிரமாண்டமான முறையில், இரு வீட்டு விருந்தினர்கள் பங்கேற்புடன், திருமணம் நடைபெற உள்ளது.
இதையொட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் ரூபாய் திருமண பத்திரிகை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றில் இந்த திருமண பத்திரிக்கைகளை வைத்து முகேஷ் அம்பானி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருமணத்துக்கு முன்பாக 8ம் தேதியான, இன்றும், 9ம் தேதியான நாளையும், உதய்பூர் நகரில் பிரம்மாண்டவகையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெறுகின்றன.
விமானங்கள்
இதற்காக உதய்பூர் நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களையும் முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். உறவினர்களும், நண்பர்களும் உதய்பூர் நகர் செல்வதற்காக சுமார் 50 தனியார் விமானங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் முதலே சிறப்பு விருந்தினர்கள் உதய்பூர் வருகை தர தொடங்கியுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்கள்
இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து மட்டுமில்லாது, உலகமெங்கிலுமிருந்து, அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகிறார்கள்.
ஆடம்பர கார்கள்
இவர்களை சிறப்பாக, வரவேற்று, கவனிப்பதற்காக தனியாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து வருவதற்காக, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட வெளிநாட்டு கார்கள் சுமார் 1000 வாங்கப்பட்டுள்ளன.
|
சாக்ஷி வருகை
திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க உள்ளனர். தோனி மனைவி சாக்ஷி, மகள் ஷிவாவுடன் இன்று மாலை உதய்பூர் வந்தடைந்தார்.

வைபோகம்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலை நிகழ்வுகளை நடத்துகின்றனர். இதனால் உதய்பூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு, இஷா தனது கணவர் ஆனந்த்துடன், மும்பை ஓர்லி பகுதியிலுள்ள ரூ.450 கோடி மதிப்புள்ள பங்களாவில் குடியேற உள்ளார். இது ஆனந்த் குடும்பத்தால், இந்த தம்பதிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications