ஜம்மு காஷ்மீரில் 300 தீவிரவாதிகள் பதுங்கல்... தொடரும் ஊடுருவல்!
ஜம்மு-காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், எல்லை வழியாக அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்த தகவலால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் காவல்துறை மற்றும் ஆட்சிப்பணி உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளிடம் மேகபூபா கேட்டறிந்தார்.

இதில் பங்கேற்ற அம்மாநில டிஜிபி ராஜேந்திரா, ஜம்மு காஷ்மீரில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், எல்லை வழியாக அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதிகளின இந்த ஊடுருவலால் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சின்னாபின்னமாகி சிதறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜ்ஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.
இதனால் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் பல இடங்கள் பதற்றமாக காணப்படுவதகவும் ராஜேந்திரா கூறினார்.
பதற்றமான பகுதிகளில் இதுவரை 73 கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 53 கட்டடங்கள் முற்றிலும் தீக்கிரையாகியிருப்பதாவும் டிஜிபி ராஜேந்திரா தெரிவித்தார்.
ஏற்கனவே எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் தற்போது ஐம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் கூறியிருக்கும் தகவல் அங்கு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications