ஜம்மு காஷ்மீரில் 300 தீவிரவாதிகள் பதுங்கல்... தொடரும் ஊடுருவல்!
ஜம்மு-காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், எல்லை வழியாக அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்த தகவலால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் காவல்துறை மற்றும் ஆட்சிப்பணி உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளிடம் மேகபூபா கேட்டறிந்தார்.

இதில் பங்கேற்ற அம்மாநில டிஜிபி ராஜேந்திரா, ஜம்மு காஷ்மீரில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், எல்லை வழியாக அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதிகளின இந்த ஊடுருவலால் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சின்னாபின்னமாகி சிதறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜ்ஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.
இதனால் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் பல இடங்கள் பதற்றமாக காணப்படுவதகவும் ராஜேந்திரா கூறினார்.
பதற்றமான பகுதிகளில் இதுவரை 73 கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 53 கட்டடங்கள் முற்றிலும் தீக்கிரையாகியிருப்பதாவும் டிஜிபி ராஜேந்திரா தெரிவித்தார்.
ஏற்கனவே எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் தற்போது ஐம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் கூறியிருக்கும் தகவல் அங்கு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications