ஜெ.வை சந்திக்க ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ கோர்ட் அனுமதி

ஆந்திராவை இரண்டாக பிரிந்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் சிறையில் இருந்து விடுதலையானதும் ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தார்.அடுத்த கட்டமாக எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்த பின்பு, கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத் பவார் ஆகியோரை சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டினார்.
அடுத்து அவர் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் அவர் நீதிமன்ற அனுமதியுடன்தான் ஹைதராபாத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டும். அதன்படி அவர் டெல்லி, மேற்கு வங்காளம், மும்பைக்கு நீதிமன்ற அனுமதியுடன் சென்றார்.
அடுத்து அவர் சென்னை செல்ல கோர்ட்டு அனுமதி கேட்டார். இது தொடர்பாக அவரது வக்கீல் ஐதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சென்னை செல்வதற்காக 4 நாட்கள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற நீதிமன்றம் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை சென்னை செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கிய 4 நாட்களில் ஏதாவது ஒரு தேதியில் அவர் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கேட்பார் என்று தெரிகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications