பாதாம் பருப்பை எடுத்ததால் ஆத்திரம்.. சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடித்த அர்ச்சகர்.. பரபர வீடியோ!
போபால்: கோயில் இருந்து பாதாம் பருப்பை திருடியதாக கூறி, சிறுவனை ஒருவரை அர்ச்சகர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவன் அழுதுகொண்ட தன்னை விடுவிக்கும்படி கெஞ்சும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ குறித்து விசாரிக்கையில், அந்த வீடியோவில் இருப்பது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

சமூக வலைதள வீடியோ
இதனைத்தொடர்ந்து எதற்கான சிறுவன் மரத்தில் கட்டி வைக்கபட்டுள்ளான், யாரால் கட்டி வைக்கப்பட்டான் என்ற விவரங்கள் தெரிய வந்தன. அதில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஹர் பகுதியில் ஜெயின் கோயில் உள்ளது. அந்த ஜெயின் கோயிலும் அர்ச்சகராக ராகேஷ் ஜெயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.

சிறுவனை அடித்த அர்ச்சகர்
இவரின் அர்ச்சனை தட்டில் இருந்த பாதாம் பருப்பை சிறுவன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அர்ச்சகர் ராகேஷ் ஜெயின், சிறுவனை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்துள்ளார். சிறுவன் கதறி அழுததுடன் தன்னை விட்டுவிடும்படி கதறியுள்ளார். ஆனாலும் அர்ச்சர் அதைக் கேட்கவில்லை. இதனிடையே சிறுவனை விட்டுவிடும்படி, அர்ச்சகரிடம் ஒருவர் அறிவுறுத்திய போது, உன் வேலையை மட்டும் பார் என்று ஆவேசமாக கூறுகிறார்.

சிறுவனின் தந்தை புகார்
இதனிடையே சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வேகமாக பரவிய நிலையில், அந்த சிறுவனின் தந்தை மோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், கோயில் அருகே நின்றுகொண்டிருந்த போது பாதாம் பருப்பு திருடியதாக என் மீது குற்றம்சாட்டி, மரத்தில் கட்டிவைத்து அடித்ததாகவும், தன்னை மரத்தில் கட்டுவதற்கு இன்னொரு நபர் உதவி புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை கைது செய்யப்படவில்லை
இதனைத்தொடர்ந்து மோதி நகர் காவல்துறையினர் அர்ச்சகர் ராகேஷ் ஜெயின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அர்ச்சகர் ராகேஷ் ஜெயின் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சகரே சிறுவனை கட்டிவைத்து அடித்த செயல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications