அந்தரத்தில் மோதிய ரோப்கார்கள்... ஜார்கண்டில் உயர்ந்த பலி... விபத்து குறித்து திடுக்கிடும் தகவல்கள்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அந்தரத்தில் இரு ரோப்கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்த நிலையில் இதுவரை 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 15 பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலை உள்ளது. இங்குள்ள பாபா பைடியநாத் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ரோப்கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 766 மீட்டர் நீளத்துக்கு, 392 மீட்டர் உயரத்தில் இந்த ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரமான ரோப் கார் வழித்தடமான இதில் மொத்தம் 25 ரோப்கார்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு ரோப் காரில் 4 பேர் உட்கார முடியும்.

ரோப்கார் விபத்து
இந்த சேவைக்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்றுமுன்தினம் வழக்கம்போல் ரோப்கார் சேவை துவங்கியது. அப்போது 2 ரோப்கார்கள் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக ரோப்கார் சேவை முடங்கியது. இதனால் 12 ரோப் கார்களில் 45 பேருக்கும் அதிகமானவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.

பலி 3 ஆக அதிகரிப்பு
இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுபற்றி அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் துரதிர்ஷ்டவசமாக ரோப் காரில் இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் பலி 3 ஆக உயர்ந்தது.

இன்னும் 15 பேர் தவிப்பு
மொத்தம் 28 மணிநேரத்துக்கும் அதிகமாக மீட்பு பணி நடந்துள்ள நிலையில் 12 ரோப்கார்களில் தவித்த 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 பேரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவில் வெளிச்சமின்மையால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இந்த பணி இன்று துவங்கி நடைபெற உள்ளது. ரோப் காருக்குள் இருந்தவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள், ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட்டதாக தேசிய பேரிடம் மேலாண்மை பிரிவு உதவி கமாண்டோ வினய் குமார் கூறினார்.

விபத்து காரணம் என்ன
இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தவுடன் ரோப்கார் சேவையை நடத்திய நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் தப்பியோடிவிட்டனர். இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications