ஆட்டு மந்தைகளைப் போல் அரசியல்வாதிகள் பின் செல்லக் கூடாது: அமெரிக்காவில் கமல் பேச்சு
நியூயார்க்: தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டுமின்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும், ஆட்டு மந்தைகளைப் போல் நாம் அரசியல் மேய்ப்பவர்கள் பின் செல்லக்கூடாது என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வருடாந்திர இந்தியக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இந்தாண்டு கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளாக "மாறி வரும் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்' என்பது குறித்து உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இந்திய மாநாட்டில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இவர்களில் கமல் பேச்சுரிமை குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கற்றல் ஆர்வம்...
பள்ளிக் கல்வியைகூட முடிக்காதவன் நான் என்பதை உங்களிடையே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், கற்றல் என்ற அடிப்படை ஆர்வம் எனக்குள் இருந்ததால் இந்த மேடையில் உங்கள் எதிரில் பேச வந்துள்ளேன்.

ஆஸ்கர் விருது...
ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது.

விழிப்புணர்வுக்காக....
எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும்.

ஆட்டு மந்தையல்ல...
ஆனால், ஆட்டு மந்தைகளைப்போல் அரசியல் மேய்ப்பர்களின் பின்னால் நாம் சென்று விடக்கூடாது' என இவ்வாறு அவர் பேசினார்.

முதல் தென்னிந்திய நடிகர்...
தென்னிந்தியாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்களில் முதன்முறையாக இந்த வாய்ப்பை பெற்றவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆர்வம்...
அதோடு, அரசியல் ஒரு சாக்கடை என்பதால் அதை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்த கமல்ஹாசன், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘எல்லோரும் அரசியலில் ஆர்வம்காட்ட வேண்டும்' என தனது பேச்சின்போது குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications