தமிழகத்திற்கு 50,000 போர்வைகள், பால் பவுடர் அனுப்ப கர்நாடக முதல்வர் உத்தரவு
பெங்களூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடுக்கு, பால் பவுடர் மற்றும், போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு உதவி செய்வது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, தலைமைச் செயலர், கவுசிக் முகர்ஜி, கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பல வகைகளிலும் உதவி செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது. அங்குள்ள கன்னடர்கள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும்.
அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவசர உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் எண் 1070ஐ தொடர்பு கொள்ள கட்டணம் கிடையாது. இதற்கு அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் வந்தன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு தற்போது, போர்வைகளும், பால் பவுடரும்தான் தேவை என்று தமிழகம் கோரிக்கைவிடுத்துள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு தரமான பால் மற்றும் பால் பவுடரை அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். 50 ஆயிரம் போர்வைகளும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு அறிவித்த ரூ.5 கோடி நிதி உதவியை தேவைப்படும்போது கேட்கிறோம் என்று தமிழக அதிகாரிகள் கூறினார்கள். அவர்கள் கேட்டபிறகு, கர்நாடக அரசு அதிகாரிகள், சென்னைக்கு நேரில் சென்று ரூ.5 கோடி நிதியை தமிழக அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். இது தவிர வேறு எந்த உதவியையும் செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது.
அரசியல் ரீதியாக தமிழக அரசோடு, பிரச்சினைகள் இருந்தாலும், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்வது எங்களது கடமை ஆகும். ஜெயலலிதாவுடன் சித்தராமையா பேசி நிவாரண பணிகள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
நிவாரண பொருட்கள் மீது ஜெயலலிதா புகைப்படம் ஒட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு எதையும் செய்ய முடியாது. நாங்கள் நல்லெண்ண அடிப்படையில்தான் பொருட்களை அனுப்புகிறோம். அதில் ஜெயலலிதா போட்டோ ஒட்டப்பட்டாலும் கவலையில்லை. இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications