வாசன் ஹெல்த் கேர் பங்கு விற்பனை வழக்கு.. அமலாக்கத்துறைக்கு கார்த்தி சிதம்பரம் திடீர் கடிதம்
வாசன் ஹெல்த் கேர் வழக்கில் பங்கு விற்பனை செய்ததில் ரூ.45 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் விளக்கமளிக்க அவகாசம் கோரி கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லி : பங்குச் சந்தையில் ரூ. 45 கோடி அளவிற்கு மோசடி செய்த விவகாரத்தில் நேரில் விளக்கம் அளிக்க ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் அவகாசம் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலமாக ரூ. 2 ஆயிரத்து 262 கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளில் இருந்து அன்னிய செலாவணி மோசடி செய்து பெற்றுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து நேரில் விளக்கமளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

பெமா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மோசடி வழக்கில் பங்குகள் விற்பனை செய்ததில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், பங்கு பரிமாற்றங்களின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததுபோல் தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அட்வான்டேஜ் ஸ்ட்ரேடிஜிக் நிறுவன நிர்வாகக் குழுவிலும் கார்த்தி இடம்பெற்றுள்ளதால் இந்த நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்ட்டது.
இந்நிலையில் 3 தினங்களுக்கு முன் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் அவர் லண்டன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புலனாய்வு ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நேரில் விளக்கமளிப்பதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications