சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த கேரள அரசு தயார்
திருவனந்தபுரம்: சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது பற்றி கருத்துக்கணிப்பு நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். ஆனால், இந்த கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல அனுமதி கிடையாது.

ஆனால், இந்த முறையை மாற்றி, அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு அதிகாரிகள் கூட்டத்தில் கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பது பற்றி கருத்துக் கணிப்பு நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாகவும், இந்த பிரச்சினையில் கோர்ட்டு உத்தரவுகளை விட, கருத்து ஒற்றுமை ஏற்படுவது முக்கியம் என்றும், அரசியல் ரீதியிலான முடிவு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது' என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், இந்த விஷயத்தில் அரசு தனது கருத்தை மக்கள் மீது திணிக்காது என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications