கேரள அமைச்சருக்கு சீனா செல்ல அனுமதி மறுத்தது ஏன்? வெளியுறவுத்துறை விளக்கம்
டெல்லி: கேரள அமைச்சரின் சீன பயணம் தேசிய நலனுக்கானது இல்லை என்பதால் அது மறுக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 11 முதல் 16ம் தேதிவரை கேரளாவின் செங்டு நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செல்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு அந்த அனுமதியை வழங்க மத்திய வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது.
இதனால் அதிருப்தியடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இன்த நிலையில், கொச்சியை சேர்ந்த வழக்கறிஞர் பினு என்பவர் ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ், இதுதொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், கேரள அமைச்சரின் சீன பயணம், இந்திய நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.